முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவையொட்டி, திருச்சியில் 100 அடி உயர கம்பத்தில், தி.மு.க., கொடியேற்று விழா நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: ஆயிரம் கொடிகள் இருந்தாலும், தி.மு.க., கொடியை போல் கம்பீரம் வேறு எந்தக் கொடிக்கும் இருக்காது. கருணாநிதியின் ரத்ததில் உருவானது இந்தக் கொடி. இந்த நிகழ்ச்சியில், நான் பார்த்ததும், பார்க்காததுமான வீடியோ காட்சிகளை ஒளிபரப்பினார்கள். இது முன்னதாகவே தெரிந்திருந்தால், என் ஊர்காரர்களை எல்லாம் அழைத்து வந்திருப்பேன். எதையும் சாதிக்கும் திறமை உள்ள அமைச்சர் மகேஷுக்கு, எதுவும் தெரியாதது போல் நடிக்கும் திறமையும் இருக்கிறது. பள்ளிக் கல்வித்துறையில் நச்சுப்பிடித்த விவகாரம் அதிகம் இருக்கும். சட்டசபையில், மானியக் கோரிக்கையின் போது, கையில் எந்த பேப்பரும் இல்லாமல், மள மளவென பேசினார். இதற்கு முன், நான் தான், சட்டசபையில் அப்படி பேசுவேன். எனக்குப் பின், அந்த ஆற்றலை பார்த்து, தி.மு.க.,வை வழிநடத்தும் தலைவன் ஒருவன் கிடைத்ததாக பெருமைப் பட்டேன். மூன்று தலைமுறையாக அரசியலில் வந்த அந்த மண் வாசனை அப்படி. கருணாநித